அண்மையவை

“தமிழ்ச் சமூகத்திற்கான ஒரு புதிய அத்தியாயம்” – தமிழ் முரசு
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து உருவாக்கிவரும் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் பற்றித் தமிழ் முரசு நாளிதழ் 2 பெப்ரவரி 2025 அன்று வெளியிட்ட செய்திவிளக்கத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வுறுகிறோம். மேலும் அறிய

பன்முகப் பண்பாட்டிற்கு அப்பால்: சிங்கப்பூரில் பண்பாடுகளின் ஊடாடல்கள்

சிங்கப்பூர் மலையாளிகள்
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் சில மலையாளி அமைப்புகளும் இணைந்து சிங்கப்பூர் மலையாளி சமூகத்தைப்பற்றிய ஒரு சிறப்பு அறிமுக நிகழ்ச்சியைப் படைத்தன. சிங்கப்பூர் இந்தியர்களுள் மலையாளிகள் இரண்டாவது பெரிய சமூகம். அவர்களுக்கென்றே ஒரு தனித்துவம் இருந்தபோதும், சிங்கப்பூர்ப் பண்பாட்டு நீரோட்டத்தில் கலந்து நம் பண்பாட்டு வளத்திற்குப் பலம் சேர்க்கும் சமூகமாக மலையாளிகள் இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை இரு காணொளிகளாகப் படைத்திருக்கின்றோம். முதல் பகுதியில், இந்நிகழ்ச்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான முனைவர் அனிதா தேவி பிள்ளையின் அறிமுக உரை, பண்பாட்டுக் காட்சிப்பொருள்கள், பாரம்பரிய நடனம் ஆகியன இடம்பெற்றுள்ளன. பார்க்க: https://youtu.be/ophQwUgQmBY
இரண்டாம் பகுதி, பேச்சாளர்கள் தங்களுக்குள் கருத்தாடுவதையும் பார்வையாளர்களோடு உரையாடுவதையும் காட்டுகிறது. பார்க்க: https://youtu.be/tue-_47Q8LM
அண்மையவை

"தமிழ்ச் சமூகத்திற்கான ஒரு புதிய அத்தியாயம்" - தமிழ் முரசு
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து உருவாக்கிவரும் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் பற்றித் தமிழ் முரசு நாளிதழ் 2 பெப்ரவரி 2025 அன்று வெளியிட்ட செய்திவிளக்கத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வுறுகிறோம். மேலும் அறிய

பன்முகப் பண்பாட்டிற்கு அப்பால்: சிங்கப்பூரில் பண்பாடுகளின் ஊடாடல்கள்
பன்முகப் பண்பாட்டைக் கொண்டாடும் சிங்கப்பூரில், பண்பாட்டு எல்லைகளைக் கடப்பது பொதுவாக நிகழ்வதில்லை. தத்தம் பண்பாடுகள் என்பதைத் தாண்டி, ‘மற்றவரின்’ பண்பாட்டை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் மற்றவர்களின் வட்டத்திற்குள் நுழைய வேண்டும். அவ்வாறு நுழைந்து திளைத்த நான்கு நபர்களை இந்த நிகழ்வு அறிமுகப்படுத்தியது. மாலிக் மஸ்லான், சீன வனப்பெழுத்துக் கலையைப் பயின்ற மலாய்க்காரர்; கோவின் டான், தபேலா உள்ளிட்ட இந்திய தாள வாத்தியங்களுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சீனர்; இவான் எங் யூ ஃபேன், ஜாவானிய நடனம், கேமலான் இசையில் ஊறிப்போன மற்றொரு சீனர்; அமிர்தா தேவராஜ், கர்நாடக இசையில் பயிற்சி பெற்றும், சிங்கப்பூரில் உருப்பெற்ற மாண்டரின் பாடல் வகையான ஸின்யாவோ உலகில் நுழைந்துள்ளார்.

சிங்கப்பூர் மலையாளிகள்
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் சில மலையாளி அமைப்புகளும் இணைந்து சிங்கப்பூர் மலையாளி சமூகத்தைப்பற்றிய ஒரு சிறப்பு அறிமுக நிகழ்ச்சியைப் படைத்தன. சிங்கப்பூர் இந்தியர்களுள் மலையாளிகள் இரண்டாவது பெரிய சமூகம். அவர்களுக்கென்றே ஒரு தனித்துவம் இருந்தபோதும், சிங்கப்பூர்ப் பண்பாட்டு நீரோட்டத்தில் கலந்து நம் பண்பாட்டு வளத்திற்குப் பலம் சேர்க்கும் சமூகமாக மலையாளிகள் இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை இரு காணொளிகளாகப் படைத்திருக்கின்றோம். முதல் பகுதியில், இந்நிகழ்ச்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான முனைவர் அனிதா தேவி பிள்ளையின் அறிமுக உரை, பண்பாட்டுக் காட்சிப்பொருள்கள், பாரம்பரிய நடனம் ஆகியன இடம்பெற்றுள்ளன. பார்க்க: https://youtu.be/ophQwUgQmBY
இரண்டாம் பகுதி, பேச்சாளர்கள் தங்களுக்குள் கருத்தாடுவதையும் பார்வையாளர்களோடு உரையாடுவதையும் காட்டுகிறது. பார்க்க: https://youtu.be/tue-_47Q8LM
சமீபத்திய அறிவிப்புகள்

இராமாயணம் சீனமொழியில்
காலத்தை வென்ற இந்தியப் பெருங்காப்பியமான ராமாயணம், பரந்து விரிந்து பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய வல்லமை கொண்டது. பெருமைக்குரிய இந்த இதிகாசத்தைச் சீனமொழியில் பல்வேறு கலை வடிவங்களாக இயற்றியுள்ளார், டாக்டர் சுவா ஸூ போங். சிங்கப்பூரைச் சேர்ந்த சீன ஒப்ரா உலகின் தலைசிறந்த கலைஞரான டாக்டர் சுவா, இந்த ஆங்கிலக் காணொளிவழிச் சீனத்தில் ராமாயணத்தைப் படைத்த பாங்கு குறித்தும் தம்முடைய கலைப் பயண அனுபவங்கள் குறித்தும் பகிர்கிறார். பண்பாட்டு எல்லைகளைக் கடப்பதற்கான ஒரு பாடம் இது!

சீனத்திலிருந்து தமிழுக்கு: மொழிபெயர்ப்புக் கலை அனுபவங்கள்
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோவைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை, என்றான் தமிழ் மகாகவி பாரதி. தாமறிந்த புலவரிலே, தமிழில் மட்டுமல்லாது உலகிலேயே மிகச் சிறந்த புலவர்களில் ஒருவர் கம்பர் என்று தன் உரையில் வாதங்களையும் சான்றுகளையும் முன் வைத்தார் பன்மொழி வல்லுநர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்.

கம்பன்: உலகின் சிறந்த புலவர்களில் ஒருவர்
சிங்கப்பூரில் இதுவரை யாரும் தலைசிறந்த சீன இலக்கியப் படைப்புகளைத் தமிழில் நேரடியாக மொழிபெயர்த்ததில்லை. அதை நிகழ்த்திக் காட்டிய இந்திய அரசாங்கத் தூதரக அதிகாரி பயணி தரன் தம்முடைய அற்புதமான அனுபவங்களை ஆங்கிலத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Dravidian and Indus Valley Script By Professor Asko Parpola
Tamil is considered by many scholars to be the oldest spoken language in the world and is believed to have its roots in the Indus valley civilization. The Indus Valley scripts were discovered in 1921 and even after 100 years they have yet to be deciphered conclusively unlike Middle Eastern scripts like Egyptian, Sumerian, Akkadian, etc.

Interior Landscapes, Intercultural Explorations: Curiosity, Openness, Pleasure
The speaker says: “This dialogue is inspired by A.K. Ramanujan’s The Interior Landscape: Classical Tamil Love Poems and by the work of the Intercultural Theatre Institute and the Centre for Singapore Tamil Culture

Munshi Abdullah: The Making of a New Man in the Malay World
Abdullah bin Abdul Kadir (1796-1854) was a leading intellectual of his time whose legacy and contributions are still remembered and recognised today. Though Melaka-born, it was in Singapore that his illustrious career bloomed

நமது மையம் CLG – ஆக மாறுகிறது
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்பம்! இரண்டு வருடங்களாகத் தனிப்பட்ட முறையில், ஒரு சமூக அமைப்பாகச் செயல்பட்டு வந்த இம்மையம், 2 ஜூன் 2021 அன்று Company Limited by Guarantee (CLG) – ஆகப் பதிவு செய்யப்பட்டு, இப்போது ஒரு சட்டபூர்வ நிறுவனமாக மாறியுள்ளது. பொது மக்களை அணுகுவதற்கும், மற்ற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும், நம்முடைய திட்டங்களுக்கு அதிகாரத்துவ முறையில் நிதி திரட்டுவதற்கும் இந்த CLG தகுதி புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. சிங்கப்பூரிலுள்ள மற்ற பண்பாடுகளுடன் பாலம் அமைப்பதும், தமிழர்களுக்கிடையே தங்கள் பண்பாட்டைப்பற்றிய புரிதலை மேலும் வலுப்படுத்துவதுமான நமது இலக்கு இப்போது இன்னும் நீடித்து நிலைக்கக்கூடிய தளத்தைப் பெற்றுள்ளது.

பண்பாட்டுப் பாலங்கள்
சி.த.ப.மை நிகழ்வுகள்
தமிழ்ப் பண்பாடுபற்றி ஆழப் புரிந்துகொள்ளவும் பிற பண்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் உதவும் நோக்கில் எங்களது நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன





பண்பாட்டுப் பாலங்கள்
சி.த.ப.மை நிகழ்வுகள்
தமிழ்ப் பண்பாடு பற்றி ஆழப் புரிந்து கொள்ளவும் பிற பண்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் உதவும் நோக்கில் எங்களது நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன





அறிவுக் கருவூலங்கள்
சி.த.ப.மை திட்டங்கள்
தமிழ்மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும் அதன் பல்வேறு அம்சங்களைப் பற்றி சமூகத்திற்கு எடுத்துரைக்கவும் எங்கள் திட்டங்கள் விழைகின்றன
அறிவுக் கருவூலங்கள்
சி.த.ப.மை திட்டங்கள்
தமிழ்மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும் அதன் பல்வேறு அம்சங்களைப்பற்றிச் சமூகத்திற்கு எடுத்துரைக்கவும் எங்கள் திட்டங்கள் விழைகின்றன.


தமிழ் இலக்கியம்
மின்தொகுப்பு
காப்பகங்கள்

தமிழ் நாடகங்கள்
மின்தொகுப்பு
காப்பகங்கள்

தமிழ் இசை
மின்தொகுப்பு
காப்பகங்கள்

தமிழ் நடன
மின்தொகுப்பு
காப்பகங்கள்

ஊடக ஆவணங்கள்
படங்கள், காணொளி, பேட்டிகள், உரைகள்
இங்கு எங்கள் நிகழ்வுகள், நடவடிக்கைகள் குறித்த மின்பதிவுகளையும் ஊடகச் செய்திகளையும் காணலாம்

படங்கள், காணிளி, பேட்டிகள், உரைகள்
ஊடகம்
இங்கு எங்கள் நிகழ்வுகள், நடவடிக்கைகள் குறித்த மின்பதிவுகளையும் ஊடகச் செய்திகளையும் காணலாம்

eight directions
About the Logo
இந்தச் சின்னம் எட்டுப் பெரிய, சிறிய அம்புகளாலும் மூன்று அடிப்படை வண்ணங்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் எண்திசை என்னும் சொல் எல்லாத் திக்குகளையும் குறிக்கும். தமிழ்ப் பண்பாடு என்பது எல்லாத் திசைகளிலிருந்தும் வந்த பெரிதும் சிறிதுமான தாக்கங்களால் உருவானதே. அதேபோன்று எல்லாத் திசைகளிலும் அதன் ஊடுருவலையும் காணலாம். எட்டு அம்புகளையும் இடைவெளிகளோடு சித்திரித்திருப்பதற்குக் காரணம், தமிழ்ப் பண்பாடு தனது எல்லைகளை முற்றிலும் மூடிக்கொண்டு உறைந்து போய்விட்ட கலாச்சாரமாக இல்லாமல் என்றென்றும் துடிப்போடு விளங்கும் பண்பாடாகப் பரிணமித்திருக்கிறது என்பதுதான். சிவப்பு, பச்சை , நீலம் ஆகிய மூன்று ஆதார நிறங்களே ஆயிரமாயிரம் வண்ணங்களுக்கு மூலம். அதேபோன்று, ஒரு பண்பாட்டின் பல்வேறு வெளிப்பாடுகளுக்கும் அதன் ஒருசில விழுமியங்களே அடிப்படை.


எண்திசைப் பரிமாற்றம்
இலச்சினை பற்றி
இந்தச் சின்னம் எட்டுப் பெரிய, சிறிய அம்புகளாலும் மூன்று அடிப்படை வண்ணங்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் எண்திசை என்னும் சொல் எல்லாத் திக்குகளையும் குறிக்கும். தமிழ்ப் பண்பாடு என்பது எல்லாத் திசைகளிலிருந்தும் வந்த பெரிதும் சிறிதுமான தாக்கங்களால் உருவானதே. அதேபோன்று எல்லாத் திசைகளிலும் அதன் ஊடுருவலையும் காணலாம். எட்டு அம்புகளையும் இடைவெளிகளோடு சித்திரித்திருப்பதற்குக் காரணம், தமிழ்ப் பண்பாடு தனது எல்லைகளை முற்றிலும் மூடிக்கொண்டு உறைந்து போய்விட்ட கலாசாரமாக இல்லாமல் என்றென்றும் துடிப்போடு விளங்கும் பண்பாடாகப் பரிணமித்திருக்கிறது என்பதுதான். சிவப்பு, பச்சை , நீலம் ஆகிய மூன்று ஆதார நிறங்களே ஆயிரமாயிரம் வண்ணங்களுக்கு மூலம். அதேபோன்று, ஒரு பண்பாட்டின் பல்வேறு வெளிப்பாடுகளுக்கும் அதன் ஒருசில விழுமியங்களே அடிப்படை.


ஊடக ஆவணங்கள்
படங்கள், காணொளி, பேட்டிகள், உரைகள்
இங்கு எங்கள் நிகழ்வுகள், நடவடிக்கைகள் குறித்த மின்பதிவுகளையும் ஊடகச் செய்திகளையும் காணலாம்.

எண்திசைப் பரிமாற்றம்
இலச்சினை பற்றி
இந்தச் சின்னம் எட்டுப் பெரிய, சிறிய அம்புகளாலும் மூன்று அடிப்படை வண்ணங்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் எண்திசை என்னும் சொல் எல்லாத் திக்குகளையும் குறிக்கும். தமிழ்ப் பண்பாடு என்பது எல்லாத் திசைகளிலிருந்தும் வந்த பெரிதும் சிறிதுமான தாக்கங்களால் உருவானதே. அதேபோன்று எல்லாத் திசைகளிலும் அதன் ஊடுருவலையும் காணலாம். எட்டு அம்புகளையும் இடைவெளிகளோடு சித்திரித்திருப்பதற்குக் காரணம், தமிழ்ப் பண்பாடு தனது எல்லைகளை முற்றிலும் மூடிக்கொண்டு உறைந்து போய்விட்ட கலாசாரமாக இல்லாமல் என்றென்றும் துடிப்போடு விளங்கும் பண்பாடாகப் பரிணமித்திருக்கிறது என்பதுதான். சிவப்பு, பச்சை , நீலம் ஆகிய மூன்று ஆதார நிறங்களே ஆயிரமாயிரம் வண்ணங்களுக்கு மூலம். அதேபோன்று, ஒரு பண்பாட்டின் பல்வேறு வெளிப்பாடுகளுக்கும் அதன் ஒருசில விழுமியங்களே அடிப்படை.
